வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (22:00 IST)

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்

டெல்லியில் கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகெங்கிலும் இருந்து பல நாட்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜீது ராய், ஹீனா சித்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.




இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஜப்பான், சீனத் தைபே ஆகிய அணி வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்திய அணி தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் ஜப்பான் அணி வெள்ளிப் பதக்கத்தையும், சீனத் தைபே அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

ஏற்கனவே உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா சார்பில் பூஜா கட்கார், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றிருந்த நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.