வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 21 அக்டோபர் 2014 (10:25 IST)

சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி–கேரளா பிளாஸ்டர்ஸ் பலப்பரிட்சை

8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி–கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள். இப்போட்டிகள் அக், 12 தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் அக், 21  இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எப்.சி–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.சென்னையின் எப்.சி தனது தொடக்க ஆட்டத்தில் 2–1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவா அணியை வீழ்த்தியது. மேலும் உள்ளூரில் பங்குபெறும் முதல் ஆட்டம் என்பதால் வெற்றியை தக்கவைக்க சென்னை அணி அயராது பாடுபடும்.
 
இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 0–1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணியிடம் தோல்வி கண்டுள்ளது. எனவே முதல் வெற்றியை பெற  கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கடுமையாக போராடும். 
 
சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் நடக்க மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.