செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2015 (21:37 IST)

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லி அணி அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், புனே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 2வது இடத்தை பிடித்துள்ளது.


 
 
டெல்லியில் நடைபெற்ற இந்தப்போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் அந்த டெல்லி அணி சொந்த மண்ணில் தனது கோல் கணக்கை தொடங்கியது. டெல்லி அணியின் ஆதில் நபி முதல் கோலை அடித்தார் இதன்பின்னர் 40-ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் அனஸ் கோல் அடித்தார். 
 
இந்நிலையில் ஆட்டத்தின் 2வது பாதியின் 87-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி டெல்லி அணி மூன்றாவது கோல் அடித்தது தொடர்ந்து முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் புனே ஒரு கோல் அடித்தது.
 
ஆட்ட நேர முடிவில், 3-1 என்ற கோல்கள் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்புத் தொடரில் டெல்லி அணி பெறும் ஐந்தாவது வெற்றியாகும். மேலும்18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு இந்த அணி முன்னேறியுள்ளது.