வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (07:29 IST)

​ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கேரளா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேரள அணி  3-1 என்ற கணக்கில்வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.


 
 
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. நேற்று இரவு நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாமின் அணியான  நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், சச்சினின் கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேரளா அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் நேரம் செல்ல செல்ல புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஆட்டத்தின் 49 வது நிமிடத்தில் கேரள அணி வீரர் ஜோசு தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து 68 வது நிமிடத்தில் ரஃபி  இரண்டாவது கோலை அடித்தார்.
 
மேலும் கேரள வீரர் வாட், 72 வது நிமிடத்தில் தனது  3வது கோலை பதிவு செய்தார். 82 வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் வெல்லீஷ்  கோல் அடித்து அணிக்கான ஆறுதல் கோலை பதிவு செய்தார்.ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.