வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:24 IST)

ஐ.பி.எல்-ல் வருமானம் எப்படி? ஐபிஎல் போட்டிகளை கொரோனா காலத்திலும் பிசிசிஐ நடத்துவது ஏன்?

மார்ச் மாதம் வந்தாலே மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் திரை நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஒரு பெஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஆக இருப்பது ஐபிஎல் போட்டி கிரிக்கெட் தொடர்தான்.

முன்னெப்போதும் இல்லாதபடி இந்த ஆண்டு கொரொனொ வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. ஆனால் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாது என்று தெரிந்தபோதும், அதை அப்படியே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிசிசிஐ நடத்துவதற்காக காரணம் என்ன என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

அதன்படி பார்த்தால் இந்தத் தொடர்மூலம் ஐசிசிஐக்கு சுமார் ரூ. 4000 கோடி அளவில் பணம் கிடைக்கும். தோனி, கோலி, ஸ்மித், வில்லியம்ஸ் என அத்தனை வீரர்களின் திறமையும் அவர்கள் போட்டியில் வெளிப்படுத்தும் ஆற்றலும் மக்களுக்கு பொழுதுபோக்குதான். வீரர்களுக்கு சம்பளம் என்றால் மக்கள் கண்டுகளிக்க அது  விளையாட்டு சாதனம். அந்த வகையில் இதை மக்களிடம் கொண்டுசெல்ல,,டிவி ஒளிபரப்பு உரிமம்,  பல டிவிக்கள், சமூக வலைதளங்கள் இருக்கும்போது, இதனிடையே வரும் விளம்பரத்திற்கு பல நிறுவனங்கள் வரும். எனவே பல வழிகளில் பிசிசிஐக்கு வருமானம்  வரும். இதைவிட பிசிசிட விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் ஸ்பான்சர்ஷிப் விவோ இல்லையென்றாலும் அதைவிட குறைந்த தொகையில் கிடைத்துள்ள ஸ்பான்சர் ஷிப் தொகை ஒத்துக்கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்பில் கொரொனா சிகிச்சை செய்து தொடரை நடத்தத்திட்டமிட்டுள்ளது.