வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2016 (16:08 IST)

பாகிஸ்தான் ரசிகரை டுவிட்டரில் க்ளின் போல்டாக்கிய அஸ்வின்

ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அஸ்வின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 
இதற்கிடையில் இந்தியா பதக்கம் வென்றது குறித்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், 120 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 4 பதக்கங்கள் தான் வென்றுள்ளனரா என்று கேலி செய்யும் விதத்தில் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில், அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில், ’120 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் நாங்கள் 4 பதக்கங்களை வென்று விட்டோம். உலக மக்கள் தொகையில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் இரண்டாவது பதக்கம் வெல்ல என்னுடைய வாழ்த்துக்கள்’ என கூறி உள்ளார்.
 
பாகிஸ்தான் ரியோ பாராலிம்பிக்கில் ஒரே ஒரு வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.