வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 ஆகஸ்ட் 2018 (16:44 IST)

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவிக்கு இந்தியா; வெற்றியை நோக்கி இங்கிலாந்து

இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போடியில் விளையாடி வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கியது.
 
டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சதம் விளாசி அசத்தினார்.
 
இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து 180 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 
 
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. முரளி விஜய், தவான், ராகுல், ராஹானே, தினேஷ் கார்த்திக் என்று எல்லா பேட்ஸ்மேன்களுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 
 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வழக்கம் போல் தனியாக நின்று போராடினார். அவரும் வெளியேற இந்திய அணி தோல்வியை நோக்கி பயணித்து வருகிறது.
 
இன்னும் 42 ரன்கள் அடுத்தால் வெற்றி. கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் உள்ளது. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களத்தில் நிற்கிறார். ஹர்திகா பாண்டியா வெளியேறினால் இந்தியாவில் தோல்வி உறுதியாகிவிடும்.