செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (15:51 IST)

ஆரம்பமே அதிர்ச்சி – ரோஹித் , கோஹ்லி & ராகுல் ஏமாற்றம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதின. போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் இன்று மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்தாலும் போட்டிக் குறித்த நேரத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் இந்தியா பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த நியுசிலாந்தை 239 ரன்களுக்கு சுருட்டினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித், கோஹ்லி மற்றும் ராகுல் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளனர். இதனால் எளிதாக வெற்றி அடையும் என எதிர்பார்த்த இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.