வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2017 (10:36 IST)

தொடரை கைப்பற்றும் முனைப்பில் கோலி தலைமை!!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி பராபாத்தி மைதானத்தில் இன்று பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. 


 
 
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் புனேவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இதனால் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும்.
 
இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும். அதனால் அந்த அணி கவனமுடன் விளையாடக்கூடும். 
 
பராபாத்தி மைதானத்தில் இதுவரை இந்திய அணி 15 ஆட்டங்களில் விளையாடி 11 வெற்றிகளை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.