வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (13:46 IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா??

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 
 
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதன்படி தற்போது ஆண்டுக்கு ரூ.1 கோடி பெறும் ‘ஏ’ பிரிவு வீரர்கள் ரூ. 5 கோடியும், ரூ. 60 லட்சம் பெரும் வீரர்கள் ரூ. 2 கோடியும், ரூ.35 லட்சம் பெரும் ‘சி’ பிரிவு வீரர்கள் ரூ. 1 கோடியும் சம்பளமாக கிடைக்கும். 
 
இத்திட்டத்தை அமல் படுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.