வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (00:12 IST)

மேட்ச் இப்படி ஆயிருச்சே! ஆஸ்திரேலியா-நியூசிலாந்து வீரர்கள் புலம்பல்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. வில்லியம்ஸன் செஞ்சுரி மற்றும் ரோஞ்சியின் 65 ரன்களால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 291 ரன்கள் எடுத்தது.



 


292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. பின்னர் மழை ஓரளவு நின்றவுடன் 33 ஓவர்களில் 235 ரன்கள் என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சம அளவில் இருந்த நிலையில் இந்த போட்டி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று நினைத்த நிலையில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது.