வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (06:33 IST)

தொடர் வெற்றியால் கொழுப்பு ஜாஸ்தி. இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர் தாக்கு

இங்கிலாந்து மற்றும் வங்கதேச தொடரை வென்றதால் இந்திய வீரர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்


 


புனேவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒருசில மணி நேரத்தில் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்திய அணி பறிகொடுத்து படுதோல்வியை அடைந்தது. களத்தில் நின்று ஆட வேண்டும் என்பதை கேப்டன் கோஹ்லி உள்பட அனைவரும் மறந்துவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியபோது, 'இந்திய அணி வீரர்களுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை. தேனீர் இடைவேளைக்கு பின் அரைமணி நேரத்துக்குள் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தனர். அவர்கள் களத்தில் நிற்கவேண்டும் என்பதையே மறந்து விட்டனர். தொடர் வெற்றிகளைப்பார்த்து அவர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது,’ என்று கூறினார்.