1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (15:38 IST)

இந்த ஐபிஎல். தொடரில் இன்னும் ரன் எடுக்காத கம்பீர் ஃபார்முக்கு வந்துடுவாராம்- சொல்றாரு W.V.ராமன்!

இந்திய அணியில் நுழைய ஐபிஎல். கிரிக்கெட்டை வாய்ப்பாக கருதி வரும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் இதிலும் கூட ரன் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒன்று சேவாக், இன்னொன்று கம்பீர்.
நடப்பு ஐபிஎல். தொடரில் கொல்கட்டா கேப்டன் கவுதம் கம்பீர் இரண்டு பூஜ்ஜியங்களுடன் இன்னும் கணக்கையே துவங்கவில்லை.
 
இந்த நிலையில் அவர் விரைவில் பெரிய அளவில் ரன்களைக் குவிப்பார் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் டபிள்யு.வீ. ராமன்.
 
"ஒரு ஆட்டம் ஆடிவிட்டால் போதும் பிறகு அதிலிருந்து பிக் செய்து விடுவார் கம்பீர், நீண்ட நாட்களுக்கு அவர் இந்த நிலைமையில் நீடிக்கமாட்டார், ஏனெனில் அவர் ஒரு சிறந்த வீரர். அவர் விரைவில் ஃபார்முக்கு வந்து விட்டால் அவரால் என்ன முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" என்றார் ராமன்.
 
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கம்பீர் டக் அடித்தார். ஆனால் கொல்கட்டா வென்றது. டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராகவும் கம்பீர் டக். இந்த முறை டெல்லி வென்றது.