1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2017 (11:58 IST)

கோலியின் பூஸ்ட் இவர் தான் தெரியுமா!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தனது கடின முயற்சியால் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 


 
 
தனது கடின உழைப்பிற்கு கிறிஸ்டியானோ ரொனோல்டோவின் கடின உழைப்புதான் உத்வேகம் கொடுத்தது என்று கூறியுள்ளார். 
 
கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறப்பவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ. கடின உழைப்பால் 31 வயதிலும் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.
 
இதுகுறித்து விராட் கோலி, நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடமிருந்து ஏராளமான வகையில் உத்வேகம் பெற்றுள்ளேன். கடின உழைப்பினால் அவர் பல வருடங்களாக முதல் இடத்தில் உள்ளார். மெஸ்சி ஒரு சிறந்த மேதை. ஆனால், கடின உழைப்பில் ரொனால்டோ அவரை விடச் சிறந்தவர் என்று தெரிவித்தார்.