வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (14:16 IST)

பிரேசில் அணி கேப்டன் சில்வா மீதான தடையை நீக்க கோரிக்கை

பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா மீதான தடையை நீக்க வேண்டும் என்று கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் கோரிக்கை வைத்துள்ளது.

பிரேசில் அணி கேப்டன் தியாகோ சில்வா ஜெர்மனி அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2 மஞ்சள் அட்டை காட்டப் பெற்றதால் அரை இறுதியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பிரேசில் அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

இதைத் தொடர்ந்து சில்வா தடையை எதிர்த்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் அப்பீல் செய்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு தலையிட்டு தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.