1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (14:40 IST)

தவறவிட்ட ரொனால்டோ; ஏமாந்த ரசிகர்கள் - சமநிலையில் முடிந்த ஆட்டம்

தனது முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்ற போர்ச்சுக்கல் அணி ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் சமநிலை பெற்றது.
 

 
ஞாயிறு அன்று [19-06-16] அன்று நடைபெற்ற போர்ச்சுக்கல்-ஆஸ்திரியா அணிகளுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
 
ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கோல் அடிக்கக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வீணாக்கி வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தில் மோதி வெளியேறிச் சென்றது.
 
மேலும் ஆட்டத்தில் 85வது நிமிடத்தில் தலையால் மோதி ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். அது ஆப் சைடு கோல் என நடுவரால் அறிவிக்கப்பட போர்ச்சுக்கல் வீரர்கள் ஏமாந்து போனார்கள்.
 
இந்த சமநிலையின் மூலம் போர்ச்சுக்கல் அணிக்கு 2 ஆட்டங்களில் இரண்டு புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.