வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (10:37 IST)

காமன்வெல்த் போட்டி: பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார்

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

48 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டியில் இந்தியாவின் குமுக்சம் சஞ்சிதா சானு தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

சஞ்சிதா 173 கிலோ எடையைத் தூக்கினார். இருப்பினும், டெல்லி காமன்வெல்த் போட்டிகளில் முதலிடம் பிடித்த அகஸ்டினாவின் கெம் வோகோலாவின் (175 கிலோ) சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டார்.

2 ஆவது இடம் பிடித்த மீராபாய் 170 கிலோ (75+95) எடையைத் தூக்கினார். நைஜீரியாவின் கெச்சி ஒபாரா 162 (70+92) எடையைத் தூக்கி மூன்றாவது இடம் பிடித்தார்.

ஜூடோ போட்டியில் இரண்டு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.