ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் அபார சதம்
இன்று நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் அபார சதம் அடித்துள்ளார்.
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15ஆவது லீக் ஆட்டம் கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மாணித்து தற்போது வரை விளையாடிவருகின்றன. இதுவரை அந்த அணி 37 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில், அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். 105 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களை எட்டினார்.
மற்றொரு வீரர் சாமுவேல்ஸ் 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினார்.