வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 22 அக்டோபர் 2014 (18:36 IST)

சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி அணிக்கு 2 ஆவது வெற்றி

8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி-கேரளா பிளாஸ்டர்சை 2–1 என்ற கோல் கணக்கில் வென்றது.
 
ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் ஆகும். இதில் அக், 21 நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. மேலும், இந்த ஆட்டத்தை காண நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்திருந்தார்.  
 
ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் கேரளா வீரர் குர்விந்தர், சென்னை வீரர் அபிஷேக்கை காலால் குறுக்கிட்டதால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சென்னை அணியின் புளுமர் அசத்தலாக கோலாக்கினார். இதையடுத்து சென்னை அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
 
பின்னர் கேரள அணியில் 50 ஆவது நிமிடத்தில் லேன் ஹூம் என்ற வீரர் பதில் கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு பிரீகிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பெர்னர்ட் மென்டி அந்தரத்தில் மிதந்தபடி கோல் அடித்தார். 
 
இறுதியில் சென்னை அணி 2–1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று தனது 2 ஆவது வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். அக், 23 நாளைய லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா–அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.