வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 14 ஜனவரி 2015 (13:34 IST)

பயிற்சியாளருக்கு அடி, உதை: டேபிள் டென்னிஸ் வீராங்கனை சஸ்பெண்ட்

ஆந்திராவில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பயிற்சியாளருடன் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கடந்த மாதம் நடைபெற்ற 76வது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 16 வீரர், வீராங்கனைகள் சென்றிருந்தனர்.
 
இந்நிலையில், ஹோட்டல் அறையில் தங்கி இருந்த சத்தீஸ்கர் மாநில டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பயிற்சியாளருடன் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
 
இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று சத்தீஸ்கர் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் செயலாளர் அமிதாப் ஷுக்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சத்தீஸ்கர் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தகுழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.