வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (07:27 IST)

இந்தியாவில் பிரேசிலின் பீலே

38 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தியா வந்துள்ள பிரேசில் கால்பந்து அணியின் ஜாம்பவான் கொல்கத்தாவில் உள்ள அவரது உருவச் சிலையை திறந்து வைத்தார்.


 
 
1977ஆம் ஆண்டு கொல்கத்தாவில், நடைபெற்ற மோகன் பகான் அணிக்கு எதிரான கண்காட்சிபோட்டியில் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே விளையாடினார்.
 
இப்போட்டிக்கு பிறகு இந்தியாவை விட்டு வெளியேறிய பீலே, தற்போது  38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
 
கொல்கத்தாவில் உள்ள என்.எஸ்.எச். எம்கல்லூரியில் அவர் பைசைக்கிள் கிக் அடிக்கும் உருவ சிலையை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.