வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (15:53 IST)

இலங்கையை வீழ்த்தி புதிய சாதனை படைத்த வங்காளதேச அணி

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கையை அணியை வீழ்த்தி வங்காள தேச அணி புதிய சாதனை படைத்துள்ளது.

 
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை - வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. 
 
இலங்கை அணிக்கு வெகு நாட்கள் கழித்து திரும்பிய மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருந்தும் வங்காளதேச அணி 261 ரன்கள் குவித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 124 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வங்காளதேச அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றி வங்காளதேச அணிக்கு புதிய சாதனையாக அமைந்தது. வெளிநாடுகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.