வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (18:56 IST)

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்குத் தகுதி பெற்றார் மேரி கோம்

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டிகள் தென்கொரியா நாட்டில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 ஆம்  தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார். இதற்கான வீரர்களின் தேர்வு ஆகஸ்ட் 27 ஆம் தேதி பாட்டியாலாவில் நடைபெற்றது.

இதில் சக வீராங்கனையான சோனியா மற்றும் பிங்கி ஜங்ரா ஆகியோரை வென்று மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் மகளிர் பிரிவில் மேரி கோம், சரிதா தேவி, பூஜா ராணி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

ஆண்கள் பிரிவில் தேவேந்திர சிங், மதன் லால், ஷிவ தாபா, அகில் குமார், மனோஜ் குமார், மன்டீப் ஜாங்ரா, விகாஸ் கிருஷ்ணன், குல்டீப் சிங், அம்ரீட் சிங், சதீஷ் குமார் ஆகிய 10 வீரர்ககள்  இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.