2ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 230 ரன்கள் பின் தங்கியிருக்கிறது. இன்னும் 3 நாட்கள் உள்ளன, 8 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் மீதமுள்ளன. ஆனால் இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்த டெஸ்ட் போட்டியை எப்பாடுபட்டாவது டிரா செய்வோம் என்று கூறியுள்ளார்.