வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்தெந்த கிழமைகளில் எந்த கோயிலுக்கு சென்றால் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...?

ஞாயிறு என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று. எனவே ஞாயிற்றுக்கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று. திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள்.

இப்படியாக மற்ற நாட்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி  என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு உரிய நாளாக அமைந்துள்ளன.
 
ஞாயிற்றுக்கிழமை: சூரியன், திங்கட்கிழமை: சந்திரன், செவ்வாய்க்கிழமை: செவ்வாய், புதன்கிழமை: புதன், வியாழக்கிழமை: வியாழன்,  வெள்ளிக்கிழமை: வெள்ளி, சனிக்கிழமை: சனி.
 
ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்தின் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டது. பொதுவாகவே இதனை அடிப்படையாக வைத்துதான் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்று வருவதால் அந்த கிரகத்தின் தாக்கத்தில் இருந்து  விடுபடலாம் என்று பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் தெரிவித்துளனர்.
 
ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வழிபாடு செய்துவந்தால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படக் கூடிய கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்  முன்னோர்களின் நம்பிக்கை.
 
திங்கட்கிழமை: திங்கட்கிழமைகளில் சந்திரனின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் திருப்பதி அல்லது திங்களூர் சென்று வழிபாடு செய்துவந்தால் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படக் கூடிய கிரக தோஷங்கள் நீங்கும்.
 
செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாயின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் வைத்தீஸ்வரன்கோயில் சென்று வழிபாடு செய்துவந்தால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படக் கூடிய தீமைகள் நீங்கும்.
 
புதன்கிழமை: புதன்கிழமைகளில் புதன் கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த கிழமையில் மதுரை மீனாட்சியம்மன்  கோயிலுக்கு சென்று  வழிபாடு செய்து வந்தால் ஜாதகத்தில் புதன் கிரகத்தால் ஏற்படக் கூடிய தீய பலன்கள் நீங்கும்.
 
வியாழக்கிழமை: வியாழக்கிழமைகளில் வியாழன் கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த கிழமையில் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வழிபாடு செய்து வந்தால் ஜாதகத்தில் குருவினால் ஏற்படக் கூடிய கிரக தோஷங்கள் நீங்கும்.
 
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை வழிபாடு செய்துவர ஜாதகத்தில் சுக்கிரனால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
 
சனிக்கிழமை: சனிக்கிழமைகளில் சனி கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் திருநள்ளாறு கோயில் சென்று வழிபாடு செய்துவர ஜாதகத்தில் சனி கிரகத்தால் ஏற்படக் கூடிய தடை,தாமதங்கள் விலகும்.