வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (15:28 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - விருச்சிகம்

தன்னை நாடி வந்தவர்களை ஆதரிப்பவர்களே! உங்களுடைய ராசிக்குள்ளேயே சனிபகவான் நின்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
 
எண்ணெய் பதார்த்தங்களையும், வாயு பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்யப்பாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. ஏழரைச் சனியின் தாக்கம் உங்களுக்கு அதிகரித்திருப்பதால் பாரம்பரிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
ஜென்மச் சனி நடைபெறுவதால் கோபம் அதிகமாகும். சகிப்புத் தன்மையும் உங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. வளைந்துக் கொடுத்துப் போவதன் மூலமாக இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் வெற்றிப் பெற முடியும். வீராப்பாக விரைத்து நின்றாலோ, வீண் வாதம் பேசி நின்றாலோ, பாதிப்புகளும், இழப்புகளும் உங்களுக்குத் தான் அதிகம் இருக்கும். தாயார் மீது பாசமாக நீங்கள் இருந்தாலும், சில நேரங்களில் கடுமையான வார்த்தைகளை பேசி நோகடித்துவிடுவீர்கள். உள்ளுக்குள் பாசம் வைத்துக் கொண்டு, உதட்டிலே கோபத்தை காட்டுவதனால் உங்களுக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும். 
 
உங்களுடைய ராசிக்கு 3-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு கணிசமாக உயரும். உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர், அண்டை மாநிலம் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் முடிப்பீர்கள். பழைய கோவிலைப் புதுப்பிக்க உங்களால் இயன்ற உதவிகள் செய்து கொடுப்பீர்கள். கௌரவப் பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும்.
 
07.01.2016 வரை கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் இவையெல்லாம் நல்ல விதத்தில் நடக்க வேண்டுமே என்ற பயமும் வந்துப் போகும்.
 
08.01.2016 முதல் 4-ம் வீட்டில் கேது வந்தமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். தாய்வழி உறவினர்களில் ஒருசிலர் உங்களைப் பகைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கம் உங்களை தொற்றிக் கொள்ளக்கூடும். உங்களின் இயல்புக்கு மாறான நடவடிக்கை உள்ளவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருங்கள். 
 
மேலும் அடுத்தப் பக்கம்..

உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
 
ஆனால் செவ்வாய் 6-ல் மறைந்திருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். மூத்த சகோதரர் உதவுவார் ஆனால் நேர் இளைய சகோதரருடன் மனத்தாங்கல் வரும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். அதனால் உறவினர், நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய புறநகர் பகுதியில் இருக்கும் நிலத்தை தந்து விட்டு நகரப் பகுதியில் வீடு வாங்குவீர்கள். வீடு வாங்குதற்கான சூழ்நிலை அமையும். 
 
உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் ஆனி மாதம் மற்றும் ஆடி மாதத்திலும், ஐப்பசி மாதம் பிற்பகுதி முதல் கார்த்திகை, மார்கழி மாதம் மத்திய பகுதி வரை மற்றும் மாசி மாதம் மத்திய பகுதி முதல் பங்குனி மாதத்திலும் பலவீனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் சிறுசிறு விபத்துகள், பணஇழப்புகள், சகோதரங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். 
 
புதன் உங்களுடைய ராசிக்கு 6-ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பழைய நண்பர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். உங்கள் நிலைமையைப் புரிந்துக் கொள்ளாமல் உங்களிடம் அவர்கள் பேசுவார்கள். அனுசரித்துக் கொண்டு போவது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம். 
 
உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனைவி ஒத்தாசையாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். அவருக்கு ஆரோக்யம், அழகுக் கூடும். ஆனால் சனி மனைவி ஸ்தானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வந்துப் போகும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.
 
குருபகவான் 4.07.2015 வரை சாதகமாக இருப்பதால் மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கும் நல்ல துணை அமையும். ஆனால் உங்களுக்கு ஜென்மச் சனி நடைபெறுவதால் பிள்ளைகளின் வாழ்க்கையைத் துணையை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் விசாரித்துப் பார்த்து திருமணம் முடிப்பது நல்லது.
 
5.07.2015 முதல் உங்கள் ராசிக்கு குரு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தக் கூடும். உங்களைப் பற்றிய விஷயங்களை, ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அதை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பணம் வாங்கித் தருவதில், கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் கொஞ்சம் குறையும். ஜென்மச் சனி நடைபெறுவதால் வேலையாட்களால் இழப்புகள், ஏமாற்றங்கள் வரும். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள்.
 
இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். போராடி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். தை மாதத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
 
உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சித்திரை வைகாசி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பார்கள். கடினமான காரியங்களைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். ஆனால் 4.07.2015 முதல் குரு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றங்களெல்லாம் வந்துப் போகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.
 
உங்களுக்கு இருக்கும் மூத்த அதிகாரிகளின் நெருக்கம் சிலரின் கண்ணை உருத்தும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். முக்கியமான ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். மூத்த அதிகாரிகள் ஒருசில விஷயங்களை செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் சட்டத்திற்கு புறப்பாக நீங்கள் எதையும் செய்துக் கொண்டிருக்காதீர்கள். என்றாலும் ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். 
 
மாணவ-மாணவிகளே! கணிதம், அறிவியல் பாடத்தில் அக்கறைக் காட்டுங்கள். ஆய்வகப் பரிசோதனையின் போது கண்ணிலோ, கையிலோ ஆசிட் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை படித்துவிட்டால் எல்லாம் மனசில் தங்கிவிடும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் நன்றாக புரிவதுப் போல இருக்கும் ஆனால் தேர்வறையில் விடையை நினைவுக்கூறும் போது திணறுவீர்கள். அதனால் விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது நல்லது. 
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் பெற்றோரின் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். திருமணம் கூடி வரும். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.
 
இந்த புத்தாண்டு கடந்த ஆண்டை விட செல்வாக்கையும், செல்வத்தையும் தந்தாலும் ஆரோக்ய குறைவையும், அலைச்சலையும் தருவதாக அமையும்.