வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (13:53 IST)

ஜய வருட ராசி பலன்கள் - சிம்மம்

எதையும் மேலோட்டமாக பார்க்காமல் ஆழமாக அலசி ஆராய்வதில் வல்லவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு கட்டுவீர்கள். 
 
உங்களின் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமைக் கூடும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி நவீன ரக வண்டி வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். 
 
வைகாசி, ஆனி மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருப்பதால் புது முயற்சிகள் யாவும் பலிதமாகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  
ஜூன் 12 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு தொடர்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 
 
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். மழலை பாக்யம் கிட்டும். ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 12ல் மறைவதால் வீண் விரயம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துபோகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை 
கவனமாகக் கையாளுங்கள். பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
 
ஜூன் 20ந் தேதி வரை கேது 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். தந்தை வழிச் சொத்துக்களை பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். ஜூன் 20ந் தேதி வரை ராகு 3ம் வீட்டில் இருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வேற்று மதத்தவர், மொழியினரால் பயனடைவீர்கள். தடைபட்ட திருமணம் கூடி வரும். 
 

ஜூன் 21ந் தேதி முதல் நிழல் கிரகங்களான ராகு 2ம் வீட்டிலும் கேது 8ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். பார்வைக் கோளாறு வரக்கூடும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. வெளிப்படையாகப் பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். 
 
டிசம்பர் 15 வரை சனிபகவான் 3ம் வீட்டில் தொடர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வேலை கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். சிலர் புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். டிசம்பர் 16ந் தேதி முதல் சனி 4ல் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதால் வேலைச்சுமை, வாகனப் பழுது, தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூட்டு வலி, தைராய்டு பிரச்னை வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
 
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி பிற்பகுதி மற்றும் மாசி மாதங்களில் அநாவசியச் செலவுகள், குடும்பத்தில் சச்சரவு, முன்கோபம், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், ஒற்றைத் தலை வலி, எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள், படபடப்பும் வந்துபோகும். 
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். சந்தையில் மதிப்பு கூடும். பங்குதாரர்களோடு இருந்து வந்த பிரச்னைக ளெல்லாம் இப்போது தீரும். நவீன வியாபார யுக்தி களையும், தற்போதைய மார்க்கெட் நிலவரத்தையும் மனதில் கொண்டு நிறைய மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்தத்தான் வேண்டும். 
 
வியாபார சங்கம் மூலமாக புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகள் வசூலாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி பிற்பகுதியில் புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்டர்பிரைசஸ், பெட்ரோ- கெமிக்கல், மருந்து, கடல் உணவு வகைகளால் லாபமடைவீர்கள். 
 

ஜூன் 12 வரை உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மூத்த அதிகாரி களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். அலுவலகத்தில் கடுமையான வேலைச் சூழ் நிலையின் நடுவில் வேகமாகவும் விவேகத்தோடும் பணியாற்ற கற்றுக் கொள்வீர்கள். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். அதனால் உங்களின் உயர்வுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வைகாசி, ஆனி, பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புதிய பொறுப்பு கள் தேடி வரும். சிலர் உத்தியோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள். 
 
கலைத்துறையினரே! பகட்டாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டியது வரும். 
 
மாணவ-மாணவியர்களே! விளையாட்டைக் குறையுங்கள். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.  
 
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
 
இந்த ஜய வருடம் தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பதுடன், நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் நிறைவேறும்
 
பரிகாரம் : காரைக்குடிக்கு அருகேயுள்ள பிள்ளை யார்பட்டியில் அருளும் கற்பக விநாயகரை சதுர்த்தி அன்று தரிசித்து வாருங்கள். பக்தர்களுக்கு அன்ன 
தானம் செய்யுங்கள்.