1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஹோமங்களில் சேர்க்கப்படும் சமித்துகளும் அதன் பலன்களும்...!

நாம் ஹோமங்கள் பல செய்கிறோம். அதில் பலவிதமான சமித்துக்களை (குச்சிகளை) அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும்  ஒவ்வொரு விதப் பலன் உண்டு. சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும்  பலன்களும் உள்ளன.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
 
அத்திக் குச்சி: மக்கட்பேறு.
நாயுருவி குச்சி: மகாலட்சுமி கடாட்சம்.
எருக்கன் குச்சி: எதிரிகள் இல்லாத நிலை.
அரசங் குச்சி: அரசாங்க நன்மை.
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும்.
வன்னிக் குச்சி: கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி: குழந்தைகளின் கல்வி வளர்ச்சி.
வில்வக் குச்சி: செல்வம் சேரும்
அருகம்புல்: விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி: புகழைச் சேர்க்கும்.
நொச்சி: காரியத்தடை விலகும்.