1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வணங்கக்கூடாதா தெய்வமா மூதேவி...? ஏன்...?

திருமகளின் மூத்த சகோதரி என அறியப்படுகிறார். இவர் பெயரை உச்சரிக்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். உண்மையில் இவள் விளைச்சலுக்கு அதிபதியாவார். இவளுக்கென ஒரு சில இடங்களில் ஆலயம் உண்டு.
தவ்வை என்பவர் பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவரை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான்  துரதிஷ்டத்தின் கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர்.
 
மூதேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு அதிபதியாகவும் இருந்தவர் இவரே. இவளுக்கு தவவை என்ற பெயரும் உண்டு. ஆதியில் காளிக்கு அடுத்து இந்த தவவை வழிபாடே முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது.
இந்த மூதேவிதான், ஜேஷ்டாதேவி என்றும் கூறுவர். இவர் சனியின் மனைவி என்றும் கூறப்படுகிறது. எனவே சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள், இந்த ஜேஷ்டாதேவி எனும் தவவையை வனங்கி வந்தால், சனி பகவானின் நன்மைகள் நம்மை வந்தடையும்.