1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (17:38 IST)

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : கடகம்

வெளுத்ததெல்லாம் பாலாக நினைப்பவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். மனைவி ஆறுதலாக பேசுவார். மனைவவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

16-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்குள் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் துரத்திக் கொண்டேயிருக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். முன்கோபத்தை குறைக்கப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும்.
 
17-ஆம் தேதி முதல் சூரியன் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்வதால் தடைகள் நீங்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். கடந்த ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பணவரவையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பிரபலங்களின் நட்பையும் தந்துக் கொண்டிருக்கும் உங்கள் யோகாதிபதியான குருபகவான் 2-ஆம் தேதி முதல் 3-ம் வீட்டில் மறைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சில வேலைகளை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்
 
 5-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 5-ம் வீட்டிலேயே சனியும் தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு குடும்பத்தினரை சந்தேகப்பட வேண்டாம். பழைய வழக்குகள் குறித்து வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் புது வழக்கறிஞரை சந்தித்து தீர்வு தேடுவீர்கள். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. நட்பு வட்டத்தில் யாரிடமும் எல்லைமீறி பழக வேண்டாம். இறக்கப்பட்டும் ஏமாந்துவிடாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்வீர்கள். கடன் வாங்கி பெரிய முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றம் வரும். மூத்த அதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.