செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. வெ‌ளி‌யீடுக‌ள்
Written By Webdunia

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன்

சிற்றிதழ் : புத்தகம் பேசுது (மாத இதழ்)
ஆசிரியர் : க. நாகராஜன
பொறுப்பாசிரியர் : சூரியசந்திரன
முகவரி :
21, குயவர் வீதி
ஜோன்ஸ் சாலை,
சைதாப்பேட்ட

(50-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ள பாரதி புத்தகாலயத்தின் உறுப்பினர்களுக்கான இலவச வெளியீடாக வருகிறது "புத்தகம் பேசுகிறது" என்ற மாத இதழ். முற்போக்கு, இடதுசாரி பின்னணி கொண்ட இம்மாத இதழில் புத்தக விமர்சனம், நேர் காணல், நூல் அறிமுகம், இலக்கிய நிகழ்வுகள் குறித்த பதிவுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

செப்டம்பர் 2003 இதழிலிருந்து திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் நேர்காணலை வெப் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.)

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி "வாசகர் வட்டம்" என்ற பெயரில் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் தமிழின் முதல் பெண் பதிப்பாளர் என்ற பெருமைக்குரியவராவார்.

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன

திருமதி. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழின் முதல் பெண் பதிப்பாளர். தமிழ்ப் புத்தகங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் வெளியிடுவதற்காக "வாசகர் வட்டம்" உருவாக்கி, சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர். சில முக்கியப் படைப்பாளிகளை தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியவர். புத்தங்களுக்கென்றே "செய்தி மடல்" நடத்தியவர். மூத்த எழுத்தாளர்களோடும் தலைவர்களோடும் நெருங்கிப் பழகியவர். சுதந்திர போராட்ட வீரரும், காங்கிரஸ் தலைவருமான திருவாளர் சத்தியமூர்த்தியின் மகள்.

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன

இவருக்கு வயது எண்பது. இந்த வயதிலும் நிறைய படிக்கிறார். "புத்தகம் பேசுது" முதல் இதழ் கிடைத்தவுடனே முழுவதும் படித்து முடித்திருக்கிறார். ரொம்ப சந்தோசம் அவருக்கு. "நாங்க முயற்சி பண்ணினோம். எங்களாலே தொடர்ந்து நடத்த முடியலே. அப்போ நிலைமை அப்படி இப்போ உங்களால நடத்தமுடியும்" என்று உற்சாகப்படுத்துகிறார். தனது கணவரிடம் "புத்தகம் பேசுது" பத்திரிகையிலேருந்து பேட்டிக்காக வந்திருக்கிறார்" என்று அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த முதிர்ந்த மனிதர் வாழ்த்து சொல்கிறார். அந்த சமயம் தன்னை சந்திக்க துணைவியாருடன் வந்த ஒருவரிடம், "புத்தகம் பேசுது" ஒரு பிரதியைக் கொடுத்து, "அப்பாவிடம் கொடு; ரொம்ப சந்தோசப்படுவார்" என்று கூறி, என்னையும் அறிமுகப்படுத்துகிறார். அவரை அனுப்பிவிட்டு, "இவர் சிட்டியின் மகன். சிட்டிக்குத்தான் கொடுத்து அனுப்பினேன். சிட்டி ரொம்ப சந்தோசப்படுவார். எங்க சோதனை முயற்சி பட்டுப் போயிடலே, இப்போ துளிர்விடுது" என்கிறார் நெகிழ்ச்சியாக.

"சரி, வாசகர் வட்டம் பற்றி பேசலாமே" என்றேன்.

"கொஞ்சம் பொறுங்க" என்று ஒரு அறைக்குள் நுழைந்து இரண்டு கைகள் நிறைய புத்தகங்களை ஏந்திக் கொண்டு வருகிறார். "இதெல்லாம் வாசகர் வட்ட வெளியீடுகள்" என்கிறார் பெருமையோடு.

முப்பது வருடத்துக்கு முன்பு அச்சிடப்பட்ட நூல்களா? வியப்பாகத்தானிருக்கிறது. ஜாக்கெட்கூட வண்ணம் மங்காமல் பளிச்சென்று இருக்கின்றன. இக்காலத்து விஞ்ஞான தொழில்நுட்ப வசதி எதுவுமில்லாமல் அந்தக் காலத்திலேயே அற்புதமாகத் தமிழ் நூல்களை பதிப்பித்திருக்கிறார். இந்த நூல்கள் இப்போது வேறு பதிப்பகங்களில் எத்தனையோ பதிப்புகளை கண்டுவிட்டன. ஆனால், இந்த அழகும் நேர்த்தியும் அவற்றில் இல்லை.

"இதென்ன எல்லா புத்தகங்களிலும் ஒரே மாதிரியான அட்டைப் படம் போட்டிருக்கீங்க?"

"கலாசாகரம் ராஜகோபால் வரைந்து கொடுத்தார். ஒரு புத்தகத்துக்குத்தான் கேட்டேன். நல்லாயிருந்தது. எல்லாத்துக்கும் போட்டுட்டேன். வாசகர் வட்ட நூல்களெல்லாம் ஒரே மாதிரி இருக்கட்டுமே" சிரிக்கிறார்.

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன

"நீங்க வெளியிட்ட முதல் புத்தகம்?.."

ராஜாஜியின் "சோக்ரதர்" புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.

"வெளியீட்டு விழாவுக்கு ராஜாஜி கலந்து கொண்டார்" என்றொரு கூடுதல் தகவலையும் கொடுத்துவிட்டு, சற்று மௌனமாகிறார்.

"நீங்க, வாசகர் வட்டத்தை ஆரம்பித்த சூழலை பேசலாமே.."

"சொல்றேன். ஆனா, அரை மணிநேரத்துக்கு மேலே என்னாலே தொடர்ச்சியா பேசமுடியாது" என்றொரு கண்டிஷனோடு தொடங்குகிறார்.

"அது 1960 காலகட்டம். அப்போ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்திலே பெ.தூரன், பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், லா.ச.ரா., க.நா.சு., சிட்டி இப்படியான இலக்கியவாதிகள் மணிக்கொடி சீனிவாசன் வீட்டிலே சந்தித்துப் பேசுவார்கள். ஒருநாள் அந்தச் சந்திப்புக்கு என்னையும் சிட்டி கூட்டிக்கொண்டு போனார். அப்போது நான் கதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். சிட்டி, என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இலக்கியவாதிகளுடன் எனக்கு நெருக்கம் அப்படித்தான் கிடைச்சது. தொடர்ந்து அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டேன். 1965இல் அந்த இலக்கியச் சந்திப்பு என் வீட்டிலேயே நடக்க ஆரம்பிச்சுது. அதோ அந்த அறையில்தான் - கூடிப் பேசுவோம் (நெகிழ்கிறார்). ஒரு இலக்கியச் சந்திப்பில், நல்லதரமான தயாரிப்பில் தங்களின் புத்தகங்களைக் கொண்டு வரணும் என்கிற ஆசை நம்ம எழுத்தாளர்களுக்கு வந்துடுச்சி. "அதற்கென்ன செஞ்சாப் போச்சு"ன்னு காரியத்தில் இறங்கினேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் வாசகர் வட்டம்.

புத்தகம் போடுறதுக்காக வீட்டை அடகு வைத்தேன். காமராஜர் கூட வருத்தப்பட்டார். "வீட்டை அடகு வைச்சு புத்தகம் போடணுமா, வேறு ஏதாவது தொழில் செய்யக்கூடாதா"ன்னு கேட்டார். நல்ல புத்தகத்தை வெளியிடுறதிலேயும், அதை மத்தவங்களுக்கு படிக்கக் கொடுக்கிறதிலேயும் கிடைக்கிற சந்தோசம் வேறு எதிலே கிடைக்கும்னு கேட்டேன்."

"அப்போது, வேறு எந்த பதிப்பகமும் இப்படியான முயற்சியில் ஈடுபடலையா?"

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன்.

"அந்தக் காலத்தில் ரொம்பப் பிரபலமானவர்கள் எழுதினால் வெளியிடுவார்கள். வாரப் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அதில் தொடர் கதை எழுதுகிறவர்களுக்கு புத்தகம் போடுவார்கள். விற்றுப் போகும். விற்பனையைப் பற்றி கவலைப்படாமல் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர் "சக்தி" காரியாலயம் வை.கோவிந்தன் தான். நான் வேறு சில திட்டங்களை முன்வைத்தேன்."

"என்னென்ன மாதிரியான திட்டங்கள்...?"

வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லோருக்கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய் கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனாலே, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்கு கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரிபார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவிடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்த குறையும் வைக்கலே. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்... இப்போ நிலைமை எப்படி இருக்கு?"

மௌனம். தொடர்கிறார்,

"சரி, ராஜாஜிக்கே அந்த நிலைமை. ஒவ்வொரு புத்தகம் வெளிவந்ததும் "வாசகர் செய்தி" என்கிற செய்திக் கடிதத்தை வெளியிடுவேன். அதில் புதிதாக வெளிவந்திருக்கும் புத்தகங்கள், வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். பின்னாளில், நூலகங்களுக்காக கவிஞர் குயிலன் நடத்திய "நூலகம்" இதழை வாசகர் வட்டம் மூலமாகவே நடத்தினேன்."

"எத்தனை சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள்"

"தமிழ்க்கூறும் நல்லுலகில் ஒரு இரண்டாயிரம் வாசகர்கள் தமிழுக்கு கிடைக்கமாட்டார்களா? என்று நம்பினேன். ஐந்நூறு சந்தாதான் சேர்ந்தது. அப்போ நல்ல நூல்களை படிக்கிற பழக்கம் அதிகமா இல்லே."

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன

"அந்தக் காலத்தில் ரொம்பப் பிரபலமானவர்கள் எழுதினால் வெளியிடுவார்கள். வாரப் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அதில் தொடர் கதை எழுதுகிறவர்களுக்கு புத்தகம் போடுவார்கள். விற்றுப் போகும். விற்பனையைப் பற்றி கவலைப்படாமல் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர் "சக்தி" காரியாலயம் வை.கோவிந்தன் தான். நான் வேறு சில திட்டங்களை முன்வைத்தேன்."

"என்னென்ன மாதிரியான திட்டங்கள்...?"

வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லோருக்கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய் கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனாலே, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்கு கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரிபார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவிடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்த குறையும் வைக்கலே. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்... இப்போ நிலைமை எப்படி இருக்கு?"

மௌனம். தொடர்கிறார்,

"சரி, ராஜாஜிக்கே அந்த நிலைமை. ஒவ்வொரு புத்தகம் வெளிவந்ததும் "வாசகர் செய்தி" என்கிற செய்திக் கடிதத்தை வெளியிடுவேன். அதில் புதிதாக வெளிவந்திருக்கும் புத்தகங்கள், வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். பின்னாளில், நூலகங்களுக்காக கவிஞர் குயிலன் நடத்திய "நூலகம்" இதழை வாசகர் வட்டம் மூலமாகவே நடத்தினேன்."

"எத்தனை சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள்"

"தமிழ்க்கூறும் நல்லுலகில் ஒரு இரண்டாயிரம் வாசகர்கள் தமிழுக்கு கிடைக்கமாட்டார்களா? என்று நம்பினேன். ஐந்நூறு சந்தாதான் சேர்ந்தது. அப்போ நல்ல நூல்களை படிக்கிற பழக்கம் அதிகமா இல்லே."

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன

"தமிழில் முதல்முதலா காண்ட்ராக்ட் திட்டத்தை கொண்டு வந்ததே நாங்கதான். முதல் பதிப்பை நான் வெளியிடுவேன். 10 சதவீதம் ராயல்டி கொடுப்போம். இரண்டாவது பதிப்பை ஆசிரியர் விரும்பம் போல வெளியிட்டுக்கலாம்."

"எந்தெந்த புத்தகங்களை வெளியிட்டீங்கன்னு பேசிகிட்டிருந்தோம்."

"ம்... நீல பத்மநாபனின் பள்ளி கொண்டபுரம், கிருத்திகாவின் நேற்றிருந்தோம், நரசய்யாவின் கடலோடி, ஆ. மாதவனின் புனலும் மணலும், நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள், எம்.வி.வி.யின் வேள்வித் தீ, கி.ரா.வின் கோபல்ல கிராமம், இப்படி...

ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதி குயிலின் சுருதி, சா. கந்தசாமியின் முதல் நாவல் சாயாவனம், அ. மாதவனின் முதல் நாவல் புனலும் மணலும் இதெல்லாம் நான் வெளியிட்டதுதான். அதுவரை சிறுகதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த லா.ச.ரா.வை நாவல் எழுத வைத்தேன். சிறுகதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவை அறிவியல் நூல்களை எழுதச் சொன்னேன். மலையாளம், தெலுங்கு, இந்தி இலக்கியங்களையெல்லாம் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிஞ்ச நம்ம மக்கள் படிக்கட்டுமே என்று தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்."

"விலை எப்படி வைச்சீங்க."

"விலை ரொம்ப குறைவு. இந்தப் புத்தகத்துக்கு விலையை பாருங்க. நாலு ரூபாய்தான் போட்டிருக்கேன். எல்லாரும் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதான், கடை விரித்தேன் கொள்வாரில்லை கதைதான்."

"நூலகத்துக்கு புத்தகம் அனுப்பினீங்களா?"

"போய் பேசினேன். அவன் பாரத்துக்கு இவ்ளோன்னு கணக்குச் சொல்லி வாங்கிக்கிறேன்னான். விலை மதிப்பில்லாத கவிதைகள், கதைகள்னு சொன்னேன். முடியாதுன்னுட்டான். போடான்னுட்டு வந்துட்டேன். கடைசி வரை நூலகத்துக்கு புத்தகம் கொடுக்கவே இல்லை."

மௌனம். பிறகு தொடங்குகிறார்,

நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன

"அக்கறை இலக்கியம்னு இலங்கை, மலேசிய தமிழ் எழுத்தாளர்களுடைய படைப்புகளைத் தொகுததுப் போட்டேன். இலங்கைத் தமிழர்கள் நிறைய வாங்கினார்கள்.

சமீபத்திலே, சாமுவேல் டத்தோ ஒரு கூட்டத்திலே சொன்னாராம், "புலம் பெயர்ந்தோர் இலக்கியம்னு இப்போதான் சொல்றீங்க. அப்பவே வாசகர் வட்டத்திலே இதுமாதிரி புத்தகங்களை போட்டுருக்காங்க"ன்னு இத்தனைக்கும் அவரை எனக்குத் தெரியாது. என்னை அவருக்குத் தெரியாது.

லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூலை "அறிவின் அறுவடை"னு தமிழில் போட்டேன். அதைப் படிச்சுட்டு அமெரிக்கத் தூதரே என் வீட்டுக்கு வந்து என்னிடம் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போனார். உங்களை மாதிரியான ஆட்களும் வந்து பேசிட்டு போறீங்க. நிறைய சோதனை முயற்சிகள் செய்தேன். தொடர்ந்து செய்யத்தான் ஆசை. முடியலே. நல்ல புத்தகங்களை வெளியிட்ட மனநிறைவு இருக்கு. இது போதும்னு நினைக்கிறேன்..."

"ஒரு சந்தேகம். நீங்கதானே தமிழின் முதல் பெண் பதிப்பாளர்."

"வை.மு. கோதைநாயகி அம்மாள், அவருடைய சொந்த புத்தகங்களை அவரே வெளியிட்டார். பதிப்பகமாக நடத்தியது நான்தான்."

"உங்க உழைப்புக்கு ரொம்ப நன்றி."

"சந்தோசம்."

- சூரியசந்திரன்