தமிழீழத்திற்குச் சென்று, அங்கேயே இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து அம்மக்களுக்குத் தூய தமிழ் கற்பித்தோடு நிற்காமல், தமிழீழம் என்பதென்ன என்று கண்டுவந்தவர் பேராசிரியர் அறிவரசன். அவருடைய கவிதை வெளியீடான ‘புத்தன் பேசுகிறேன்’ முழுக்க முழுக்க ஈழத் தமிழினத்தின் விடுதலை நியாயத்தைத்தான் பலமாக பேசுகிறது.