1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Dinesh
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2016 (00:45 IST)

விளையாட்டாய் நடந்துக்கொண்ட விளையாட்டுத்துறை மந்திரி – எச்சரித்த ஒலிம்பிக் கமிட்டி

விளையாட்டாய் நடந்துக்கொண்ட விளையாட்டுத்துறை மந்திரி – எச்சரித்த ஒலிம்பிக் கமிட்டி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் ரியோ சென்றுள்ளார்.


 


இந்நிலையில், போட்டி நடக்கும் அரங்கிற்கு அங்கீகார அட்டை இல்லாதவர்களையும் தன்னுடன் விஜய் கோயல் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், விஜய் கோயல் தரப்புக்கும், ஒலிம்பிக் கமிட்டி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதை அடுத்து, மீண்டும்  இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் விஜய் கோயலின் அடையாள அட்டையை ரத்து செய்ய நேரிடும் என்று ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.