வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (13:09 IST)

திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியங்கள்

திருப்பதி ஏழுமலையான் மிகவும் பிரபலாமானவர் ஆனால் அவரின் சிலையின் மகிமைகள் பலருக்கும் தெரியாது. பல சுவாரசியங்கள் அடங்கிய திருப்பதி சிலையின் ரகசியங்களை இந்த பதிவில் பார்ப்போம்.



* திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும்.

* திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

* 3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

* பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.

* எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.