வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (15:50 IST)

மோடி அலை வீசவில்லை; மோடிதான் அலைந்து கொண்டிருக்கிறார் -கி.வீரமணி

மோடி அலை மோடி அலை என்று கூறுகின்றனர், ஆனால் மோடிதான் இந்தியா முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலியை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது, அக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது அவர், நடைபெறவுள்ள தேர்தலுக்கும் இதுவரை நடந்த தேர்தலுக்கும் அதிக வேறுபாடு உள்ளது என்றும், தி.மு.க. தலைமையில் அமைந்துள்ளது மகத்தான, மக்கள் கூட்டணி ஆனால் எதிரணியினர் அமைத்துள்ள கூட்டணி குறித்து நாங்கள் பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய கவலையில் உள்தாகவும் கூறினார்.
 
மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய கூட்டணிதான் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும், இதில் அனைத்து சமுதாயத்திற்கும் இடமிருப்பதாகவும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கும் இடமளித்து தேர்தல் களத்தினை தலைவர் கருணாநிதி கண்டு வருகிறார் என்றும் இது ஒரு சமூக கூட்டணி, கொள்கை கூட்டணியாகும், ஆனால் எதிரணியில் வெளியே ஒரு பேச்சு, உள்ளே ஒரு ஏற்பாடு நடக்கிறது என்று கூறினார்.
 
புதிய வாக்காளர்களுக்கு மோடி வித்தை பற்றி தெரியாது, ஆனால் வயதானவர்களுக்கு மோடி வித்தை பற்றி நன்றாக தெரியும், 1992இல் பாபர் மசூதி இடிப்பு, 2002 குஜராத்தில் சிறுபான்மையினத்தை அழித்ததை உலக அறிஞர்கள் எல்லாம் கண்டித்தார்கள் என்றார்.
 
இஸ்லாமியர்களை ஒழிக்க பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது என்றும் இந்தியாவில் பன்மொழி, கலாச்சாரத்தை ஒழிக்க இவை தீர்மானித்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் பல கோடி செலவு செய்து மோடியை முன்னிறுத்தி வருகின்றனர்.
 
மோடி அலை மோடி அலை என கூறுகின்றனர். அப்படி ஒரு அலை வீசினால் அவர் ஏன் இந்தியா முழுவதும் . ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்பவர் அவருடைய இடத்தில் அல்லவா இருக்க வேண்டும். இப்படி அலைய கூடாது. அதே போல் பிரதமர் வேட்பாளர் என்பவர் தற்போது நடிகர்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்த நிலை வெட்ககேடானது. பா.ஜ.க. தலைமையில் உள்ள கூட்டணி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கூட்டணியாக உள்ளது.