1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2013 (12:13 IST)

பாதிரியார் கற்பழித்த விவகாரம்: 5 மாத சிசுவின் கரு தோண்டி எடுக்கப்படுகிறது!

FILE
நெல்லை பேட்டையை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி அடிக்கடி அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வருவார். மேலும் ஆலயத்தில் உள்ள ‘கொயர்’ பிரிவில் சேர்ந்து பாடல் படித்து வந்தார்.

அப்போது அந்த ஆலயத்தில் பாதிரியாராக வேலை பார்த்த செல்வன் மாணவிக்கு பாடல்கள் சொல்லி கொடுப்பது போல் தனியாக அழைத்து தனது காமப்பசியை தீர்த்துக்கொண்டார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். அவளது வயிறு பெரிதானதால், வீட்டில் சந்தேகப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தான், மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் விபரத்தை பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினார்கள்.

ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர், என்ன செய்வது என்று தெரியாமல், தங்கள் மகளை கற்பழித்த, அந்த காமூக பாதிரியார் செல்வனிடமே சென்று நியாயம் கேட்டனர்.

உடனடியாக பாதிரியார் செல்வன், தனது பண பலத்தின் மூலம், மாணவிக்கு கருக்கலைப்பு செய்து, பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி மாணவி மேரியை நெல்லை டவுணில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று 5 மாதம் வளர்ந்த சிசுவை கருக்கலைப்பு செய்து அகற்றினார். பின்னர் அந்த கருவை, பாதிரியார் பணி செய்த ஆலயத்துக்கு சொந்தமான மயானத்தில் புதைத்து விட்டனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய மாணவியின் நிலையை அறிந்த அந்த பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் பாதிரியார் செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

உடனடியாக பாதிரியார் செல்வன், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பால், மாணவி மேரியின் தந்தை ராஜன் நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் மீனாட்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இன்று போலீசார் மாணவியை, பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவி மேரிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் நெல்லை தாசில்தார் முன்னிலையில் பேட்டை மயானத்தில் புதைக்கப்பட்ட 5 மாத சிசுவின் கருவும் தோண்டி எடுக்கப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான தனிப்படை போலீசார் தப்பி ஓடிய பாதிரியார் செல்வனை தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரத்திற்கும் தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.