செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:55 IST)

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமியாரைப் போட்டுத் தள்ளிய மருமகள்!

காட்டுமன்னார்கோவில் ஊரில் உள்ள விசித்திரமான 'சிறகிழந்த நல்லூர்' என்ற பெயர் உடைய கிராமத்தைச் சேர்ந்த அம்சவள்ளி என்ற பெண் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தன் காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
 
25 வயதான கொலையாளி அம்சவள்ளியின் கணவன் பெயர் லட்சுமணன் இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்ச்முமணன் வெளிநாட்டில் பணியாற்றி வந்தார்.
 
லட்சுமணனின் சகோதரர் இளவரசன் திருப்பூரில் பணியாற்றி வந்தார். கள்ளக்காதலில் சிக்கிய அம்சவள்ளி தன் மாமியார் மீனாட்சியுடன் சிறகிழந்த நல்லூரில் வசித்து வந்தார்.
 
இந்த நிலையில் திருப்பூரில் இருந்த இளவரசனுக்கு இவரது தாயார் மீனாட்ஷி இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார்.
 
கிராமத்திற்கு வந்த இளவரசன் தன் தாயார் மீனாட்சியின் சாவு மீது சந்தேகம் கொண்டு போலீசுக்குச் என்றார். 
 
போலீஸ் அம்சவள்ளியை கைது செய்து விசாரணை செய்தபோது உண்மையைக்  கக்கினார் அவர்:

எனக்கும் இதே பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் காளிரத்னம் (26) என்பவருக்கும் கடந்த 6 மாதமாக கள்ளக்காதல் இருந்து வந்ததது. இந்த கள்ளக்காதலுக்கு மீனாட்சி இடையூறாக இருந்து வந்தார். எனவே அவரை கொலைசெய்ய  நானும், காளிரத்னமும் திட்டமிட்டோம். 
 
அதன்படி நேற்று முன்தினம் இரவு மீனாட்சி சாப்பிட்டு கொண்டிருந்தபோது நானும், காளிரத்னமும் சேர்ந்து மீனாட்சியை கொன்றோம். நான் மீனாட்சியின் கால்களை பிடித்து கொள்ள காளிரத்னம் மீனாட்சியை கழுத்தை நெரித்து கொன்றார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்
 
இதையடுத்து போலீசார் அமசவள்ளி மீது கொலைவழக்குபதிவுசெய்து உள்ளனர்.