வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (05:37 IST)

ஏழை-எளியவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: யுவராஜா கோரிக்கை

தமிழகத்தில் உள்ள, ஏழை-எளியவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமாகா இளைஞர்அணி மாநில தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
ஈரோட்டில், தமாகா இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமாகா இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை, எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் தேதி வெளியிட்டார். இளைஞர் அணி முதல் மாநில செயற்குழு கூட்டம் வரும் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
 
இந்த கூட்டத்தில் இளைஞர் அணியின் செயல்பாடுகள், தமிழக மக்கள் நலன்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து செல்வது போன்றவை ஆலோசனை செய்யப்படும்.
 
தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் அனைவரும், கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்டவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தில் அதிக அளவில் ஏழை- எளிய மக்கள் உள்ளனர். இதனால், தமிழக அரசு பல இலவச திட்டங்களை செயல்படுத்தி வருவதுபோல ஏழை-எளிய மக்களுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர எடுக்க வேண்டும் என்றார்.