செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (22:07 IST)

பதிலே இல்லாத கேள்வியை பார்த்து பரிதவித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள்

தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் உள்ள ஒரு கேள்வியை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேள்வி இதுதான் 'இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்?



 


உண்மையில் இந்தியத் திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்? என்று கேள்வி கேட்டால் மாணவர்கள் அதிர்ச்சி அடைவார்களா? மாட்டார்களா?

இந்த சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.