வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (23:23 IST)

‘மேகி நூடுல்சில் புழு’ - சென்னை பெண் புகார்

‘மேகி நூடுல்சில் புழு’ - சென்னை பெண் புகார்

சென்னை, மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஜெனட் என்ற பெண், அப்பகுதியிலுள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் மேகி பாக்கெட் வாங்கியுள்ளார்.


 


அதை சமைத்தபோது உள்ளே புழு நெளிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து, ஜெனட், அந்த விஷயத்தை பற்றி மேகி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார், அதற்கு, மேகி அதிகாரிகள், கிஃப்ட் வவுச்சர் பெற்றுக்கொண்டு விஷயத்தை அப்படியே விடுமாறு கூறியுள்ளனர். இதை கேட்டு கோபமடைந்த ஜெனட், இது தொடர்பாக, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வேதி பொருள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மேகிக்கு தடைவிதிக்கப்பட்டு, பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகே, மேகி, மீண்டும் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.