வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (14:52 IST)

சொத்துக்காக பெற்ற தாயையே கொலை செய்ய உதவிய மகன்

திருநெல்வேலியில் உள்ள் நெல்லையப்பர் கோவில் அருகே நேற்று பெண் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சொத்துக்காக மகனே தாயை கொலை செய்ய உதவியுள்ளார்.
 
நெல்லை டவுன் அம்மன்சன்னதியை சேர்ந்த தாயம்மாள் (50). இவரது கணவர் கணேசன். கணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு முத்துலட்சுமி (22) என்ற மகளும், வெங்கடேசன் என்ற சண்முகம் (20) என்ற மகனும் உள்ளனர். முத்துலட்சுமி பி.காம். பட்டதாரி.
 
தாயம்மாள் தனது கணவரின் இறுதி சடங்குக்காக அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரிடம், தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். தற்போது முத்தையாவிடம் தாயம்மாள் வட்டியுடன் திருப்பி கொடுத்து, அடமானம் வைத்த சொத்தையும் மீட்டுள்ள்ளார்.
 
இன்றைய நிலையில் அந்த வீட்டின் மதிப்பு பல லட்சம் ரூபாய் எனபதால் எப்படியாவது அந்த வீட்டை கைப்பற்ற வேண்டும் என முத்தையா திட்டமிட்டுள்ளார். இதற்காக, வெட்டியாக ஊர் சுற்றித்திரிந்த தாயம்மாளின் மகன் சண்முகத்தை ஆசை வார்த்தை கூறி தனது வலையில் விழ வைத்துள்ள்ளார்.
 
சண்முகமும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில், முத்தையாவின் சதித் திட்டத்துக்கு துணை போயுள்ளார். இதனால், தனது தாயார் தாயம்மாளின் நடவடிக்கைகள் குறித்து சண்முகம் தரப்பிற்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் தாயம்மாள் பால் வாங்குவதற்காக நேற்று வீட்டில் இருந்து பாரதியார் தெருவுக்கு சென்றது குறித்து முத்தையா தரப்பினருக்கு சண்முகம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து முத்தையா தரப்பு ஆட்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அரிவாளால் தாயம்மாளை நடுரோட்டில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
 
தற்போது தாயம்மாளின் மகன் சண்முகத்தை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சொந்த தாயாயே கொலை செய்ய மகன் உதவிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.