வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : சனி, 8 அக்டோபர் 2016 (02:11 IST)

சென்னை அணி திரும்ப வருமா?

கடந்த 2013 ஆம் நடந்த ஐ.பி.எல்., தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் சிக்கின. 


 
 
இதை அடுத்து, உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்ட லோதா குழு இந்த அணிகளுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான பெஞ்ச் முன் கடந்த 4 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 
 
இந்நிலையில், நேற்று இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.