வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (19:20 IST)

ஆசிட் வீச முயன்ற மனைவி; சுத்தியலால் மண்டையை உடைத்த கணவன்

மனைவி தன்மீது ஆசிட் வீச முயன்றதை அடுத்து, கோபமடைந்த கணவன் சுத்தியலால் மண்டையை உடைத்ததை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
 

 
சென்னை அம்பத்தூரை அடுத்த ஞானமூர்த்திநகரை சேர்ந்தவர் முரளி (55). ஒவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நளினி (45). கணவன், மனைவி இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 
இந்நிலையில், இன்று காலைய அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த நளினி, பாத்ரூமுக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து கணவன் மீது வீச முயன்றுள்ளார். அவர் தட்டிவிட்டதால் அது கீழே விழுந்து உடைந்தது.
 
இதனால் ஆத்திரமடைந்த முரளி வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து நளினியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து நளினி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பயந்துபோன முரளி இங்கிருந்து தப்பினார்.
 
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நளினியை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முரளியை கைது செய்தனர்.