1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (10:26 IST)

'பீப்' பாடலுக்கு போராடிய மகளிர் அமைப்பினர் எங்கே போனார்கள்? - டி.ராஜேந்தர் கேள்வி

சில மாதங்களுக்கு முன், 'பீப்' பாடலுக்கு எதிராக போராட்டம் நடத்திய மகளிர் அமைப்பினர், சுவாதி கொலையைக் கண்டித்து ஏன் போராடவில்லை என நடிகர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
தண்டையார்பேட்டையில் லட்சிய திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டி.ராஜேந்தர், ”லட்சிய திமுக, அரசியலில் இதுவரை ஒதுங்கி இருந்தது. இனி வரும் காலங்களில் அப்படி இருக்காது. உள்ளாட்சி தேர்தலில், இளைஞர் பட்டாளத்துடன் போட்டியிடுவோம்.
 
சில மாதங்களுக்கு முன், 'பீப்' பாடலுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த மகளிர் அமைப்பினர், தற்போது எங்கே போனார்கள்?
 
பொது இடத்தில், சுவாதி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏன் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மீண்டும் எந்தவொரு பெண்ணுக்கும், இந்த நிலை ஏற்படக் கூடாது” என்று கூறியுள்ளார்.