வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (12:36 IST)

சுவாதியுடன் தொடர்பில் இருந்த தயாரிப்பாளரின் மகன் யார்?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தினமும் வெளிவருகின்றன.


 
 
சின்னத்திரையில் பிரபலமான தயாரிப்பாளர் ஒருவரின் மகனும் சுவாதிக்கு நெருங்கிய நண்பர் என சொல்லப்படுகிறது. பிலாலையும், ராம்குமாரையும் விசாரித்த காவல்துறை அந்த தயாரிப்பாளரின் மகனையும் விசாரித்தார்களா என தெரியவில்லை.
 
இவரும் முஸ்லீம் என்பதால் இந்த வழக்கில் மேலும் சர்ச்சைகள் உருவாகி உள்ளது. ஏற்கனவே பிலால் மாலிக் ஒரு முஸ்லீம் என்பதால் பல்வேறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் வருகின்றன. இந்நிலையில் சுவாதியின் மற்றொரு நெருங்கிய நண்பரான அந்த தயாரிப்பாளரின் மகனும் முஸ்லீம் என்பதால் இந்த கொலை வழக்கில் பல தவிர்க்க முடியாத சந்தேகங்கள் உருவாகி வருகின்றன.