வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (14:56 IST)

யார் சிறந்த அடிமை?: எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ விளாசிய நாஞ்சில் சம்பத்!

யார் சிறந்த அடிமை?: எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ விளாசிய நாஞ்சில் சம்பத்!

அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகளுக்கு பின்னர் மூன்றாவதாக தினகரன் அணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த அணியில் உள்ள நாஞ்சில் சம்பத் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அடிமை என விமர்சித்துள்ளார்.


 
 
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் டெல்லி சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை தினகரன் ஆதரவு நாஞ்சில் சம்பத் அடிமை என விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் கணக்கில் நாஞ்சில் சம்பத், குடியரசு தலைவர் தேர்தலில் துணைப் பொதுச்செயலாளரை ஆலோசிக்காமல் ஏக மனதாக ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து யார் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்க டெல்லிக்கு பறந்து விட்டார்கள் என கூறியுள்ளார்.