1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (06:15 IST)

வெறிச்சோடி போன தீபா அலுவலகம்: கணவருடன் இணைவாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்வி எழுந்தபோது பலர் சுட்டிக்காட்டியது அவரது அண்ணன் மகள் தீபாவைத்தான்



 


இதனால் தீபாவின் தி.நகர் வீட்டு முன்னர் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து ஜெயலலிதா இடத்தை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ஆரம்பத்தில் அரசியலில் நுழைய யோசித்த தீபா, ஓபிஎஸ் அவர்களின் தியானத்திற்கு பின்னர்  அவருடன் இணைய முயற்சித்தார். ஆனால் தவறான வழிகாட்டுதலால் தனி அமைப்பை தொடங்கி, அந்த அமைப்பிலும் ஆரம்ப நிலையிலேயே கோஷ்டி பூசலை ஏற்படும்படி செய்தார். குறிப்பாக அவரது கணவரே அவரை எதிர்க்கும் நிலை உண்டாகியது.

தற்போது கணவரை வீட்டைவிட்டு விரட்டிவிட்டு தனி ஆளாக கட்சி நடத்தி வருகிறார். தீபாவின் முரணான அரசியலால் தொண்டர்கள் தீபாவை மறக்க தொடங்கிவிட்டனர். தற்போது தீபாவின் வீட்டின் முன்னும், அலுவலகத்திலும் ஒரு பத்து பேரை கூட பார்க்க முடியவில்லை. தீபாவின் அரசியல் மற்றும் முதல்வர் கனவு அஸ்தனமனத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.