வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (13:34 IST)

காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறை இருக்க தயார் - மு.க.ஸ்டாலின்

காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியுள்ள திமுக  செயல் தலைவர் முக.ஸ்டாலின் காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயாராக இருகிறோம் என்று கூறியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணம் நேற்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் தொடங்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் இருந்து புறப்பட்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்த பயணம் அரசியல் பயணமல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எள்ளளவும் முயற்சி செய்யவில்லை. தமிழகத்திற்கு வரும் 12ஆம் தேதி தமிழகட்ம் வருகிறார். அனவைரும் கருப்பு உடை அணிவோம். மேலும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள். 
 
காவிரி பிரச்சனைக்காக நாங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.