வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (09:03 IST)

சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது: சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
விருதுநகரில் 14 ஏக்கர் பரப்பளவில் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்து வருகிறார்.
 
இந்த மணிமண்டபத்திற்காக நிதி வழங்கும் விழா திருப்பூர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்தி விழாவில் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது சரத்குமார் கூறுகையில், "சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது. இளைஞர்களுக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
 
டாஸ்மாக் கடையைப் பூட்டுவதற்கு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடையில் மதுவை வாங்காமல் புறக்கணித்தால் அந்த கடை தானாக மூடப்படும்.
 
எனவே உங்கள் கிராமத்தில் இதற்கு ஊர்க்கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு செய்யுங்கள். என்று சரத்குமார் கூறினார்.