1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:26 IST)

முன்மொழிந்தவர்களை மிரட்டிய வீடியோ ஆதாரம் உள்ளது - விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வெட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு வருகிறார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரது வேட்பு மனு இன்று தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிகாரித்தார். முன்மொழித்தவர்கள் பெயர்கள் தவறாக குறிப்பிட்டுள்ளதாக வெட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் நடிகர் விஷால் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். பின்னர் காவல்துரையினர் அழைத்து பேசிய பிரகு போரட்டத்தை கைவிட்டார். தற்போது தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு நிராகரிப்பு குறித்து முறையிட்டு வருகிறார்.
 
பின்வாங்கிய முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.